உள்ளே!
- ஆலயங்கள்33
- கல்வி நிறுவனங்கள்11
- நூல்கள்31
- பிரபலமானவர்கள்42
- கிராமங்கள்/நகரங்கள்1



திருக்கேதீஸ்வரம்10 வைகாசி, 2012

தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களுள் இரண்டு இவ்விலங்கையில் உள்ளன. அவைகளில் ஒன்றாகிய திருகோணமலைக்குச் சம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிக மொன்றிருக்கின்றது. மற்றொன்றாகிய திருக்கேதீச்சுரத்துக்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றும் இருக்கின்றன. இத் திருக்கேதீச்சுரம் இவ்வடமாகாணத்தின் கண்ணுள்ள மன்னாருக்கு அதிசமீபத்திலிருக்கின்ற மாதோட்த்தினுள்ளது. இத் திருக்கேதீச்சுரம் அழிந்து காடாகக்கிடக்கின்றதே! புதிது புதிதாக இவ்விலங்கையில் எத்தனையோ கோயில்கள் கட்டப்படுகின்றனவே! ...
வேலணை பெருங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
ஈழவள நாட்டிலே அமைந்திருக்கின்ற ஆலையங்களில் மிகவும் பழமை வாய்ந்தனவும் புராதனமானமானவையுமான ஆலயங்களில் பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலையமும் ஒன்றாகும்.ஆங்கிலேயர் தொகுத்து வைத்திருந்த அரச பதிவேடுகளில் இவ்வாலயத்தைப் பற்றிய குறிப்புக்களை காண முடிகின்றது. அன்னை பராசக்தியை பற்பல திருக்கோலங்களிலும், காளி, துர்க்கை, ஈஸ்வரி எனப் பற்பல நாம கரணங்களிலும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அவற்றுள் முத்துமாரி என்ற மூர்த்தமும் ...
நயினாதீவு மகா வித்தியாலயம்
இலங்கையின் இலவசக்கல்வியின் தந்தை என கூறப்படும் திரு சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா அவர்களின் பெருமுயற்சியால் கிராமங்கள் பலவற்றிலும் அரசாங்க பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவ்வகையில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய நயினை அம்மன் குடியிருந்து அருள்பாலிக்கும் நயினாதீவிலும் 1946 ஆம் ஆண்டு தைத்திங்கள் 17ஆம் நாள் 228 மாணவர்களுடன் ஒரு கனிஸ்ட ஆங்கிலப் பாடசாலை நிறுவப்பட்டது. நயினாதீவின் கண்ணே ...
